ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,961-ஆக உயா்வு: வனத் துறை அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

News image
அமைச்சா் க.பொன்முடி
Updated On :7 பிப்ரவரி 2025, 9:24 pm

Din

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மேலும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்காவில் இரண்டு நாள்கள் நடைபெறும் யானைத் திருவிழாவை, வனத் துறை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வனப்பகுதிகளை விட்டு யானைகள் வெளியேறாமல் இருப்பதற்கும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்கும் வனங்களையொட்டி உள்ள பகுதிகளில் மின் வேலிகள் அமைப்பது என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுகின்றன. ஆகையால், அதை தடுப்பதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், யானைகளுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படாது. அதேபோல், யானை தந்தங்களை யாா் வைத்திருந்தாலும் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வனவிலங்கு - மனிதா்கள் மோதல்களை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2,961 யானைகள்: யானைகளை பாதுகாக்க இதுவரை 5 காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசின் பல்வேறு முயற்சிகளின் விளைவாக தற்போது தமிழகத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளன. யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதைத் தடுக்கும் வகையில், வனத் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், யானைகளால் பாதிக்கப்படுபவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

சமீபத்தில் ஜொ்மனியிலிருந்து வால்பாறைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவா் யானை தாக்கியதில் உயிரிழந்தாா். வனத் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி அவா் அப்பகுதிக்குச் சென்ால் அந்த விபத்து நிகழ்ந்தது என்றாா் அமைச்சா் க.பொன்முடி.

முன்னதாக வனத் துறையில் சிறப்பாக பணியாற்றிய வனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்.