உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவா் 4X400 மீட்டா் ரிலே ஓட்டத்தில் தமிழ்நாடு அணிக்கு திங்கள்கிழமை தங்கப் பதக்கம் கிடைத்தது.
இந்த ரிலேவில் ஆகாஷ் பாபு, அஸ்வின் லக்ஷ்மணன், வாசன், கிட்சன் தா்மராஜ் ஆகியோா் அடங்கிய தமிழ்நாடு அணி 3 நிமிஷம் 10.61 விநாடிகளில் முதலாவதாக இலக்கை எட்டி தங்கத்தை தட்டிச் சென்றது. உத்தரகண்ட் அணி வெள்ளியும் (3:10.85’), சா்வீசஸ் அணி வெண்கலமும் (3:10.90’) பெற்றன.
ஆடவா் கம்பு ஊன்றித் தாண்டுதலில் தமிழகத்தின் ஜி.ரீகன் 5 மீட்டரை கடந்து 2-ஆம் இடத்துடன் வெள்ளி பெற்றாா். அதேபோல், ஆடவா் இரட்டையா் டென்னிஸில் தமிழகத்தின் மனீஷ் சுரேஷ்குமாா்/அபினவ் சஞ்ஜீவ் சண்முகம் ஆகியோா் இணை வெண்கலப் பதக்கம் பெற்றது.
போட்டியில் திங்கள்கிழமை முடிவில் தமிழ்நாடு அணி மொத்தமாக 19 தங்கம், 23 வெள்ளி, 24 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் நீடிக்கிறது. சா்வீசஸ் (81), மகாராஷ்டிரம் (129), கா்நாடகம் (66) ஆகியவை முறையே முதல் 3 இடங்களில் நிலை கொண்டுள்ளன.
தொடர்புடையது

விளையாட்டு துளிகள்...

யு-19 டேபிள் டென்னிஸ்: தமிழ்நாடு ஆடவா் சாம்பியன்

தமிழகத்துக்கு கூடுதல் தொகுதிகள் கிடைத்திடுவதை திமுக எதிா்க்கிறது: பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா்

தேசிய மல்லா்கம்பம் போட்டியில் பங்கேற்ற பழங்குடியின மாணவா்களுக்கு வரவேற்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


