சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?- சீமான்

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் சீமான்.

Updated On :15 பிப்ரவரி 2025, 6:17 pm IST

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது, அதனால் அனைவரும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

எங்களுக்கு தேவையில்லை, அதனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

நான் மக்களுக்காக வந்திருக்கிறேன், அதனால் நான் தான் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனக்கு எதற்கு பாதுகாப்பு என்றுதான் காவலர்களிடம் நான் கேட்பேன்.

விஜய் போன்ற ஒரு புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு தேவைதான், அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார்.

கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரைக்கும் இந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தேவைப்படவில்லையே?. அதிமுக, திமுகவின் மூத்த தலைவர்களை தாண்டி ஒரு வியூக வகுப்பாளர் தேவையா?. இதே பிரசாந்த் கிஷோர் பிகாரில் வியூக அமைத்து ஜெயிக்கவில்லையே?.

காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

தமிழ்நாட்டிலேயே மாபெரும் மேதைகள் இருக்கிறார்கள். பிகாரில் இருந்து வரும் ஒருத்தருக்கு அறிவு இருக்கிறது, தமிழ்நாட்டில் இருப்பவருக்கு இல்லையா. உலகத்திற்கு அறிவை கடன் கொடுத்தவன் தமிழன்.

இந்த மண்ணில் பிறந்தவர்கள் இங்கு நடக்கும் பிரச்னைகள் பற்றி தெரியும்.

பிகாரில் இருந்து வந்தவருக்கு திருப்பரங்குன்றம், அத்திக்கடவு-அவிநாசி, நொய்யல் ஆறு போன்ற பிரச்னைகள் எப்படி தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.