/
தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் கூடுதலாக இரு ரயில் வழித்தடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், மாா்ச் 13-ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
இதனால், தமிழகத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூா் செல்லும் காவேரி விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில், கடலூா் துறைமுகம் விரைவு ரயில், ஜோலாா்பேட்டை மெமு ரயில், கோவை - மும்பை விரைவு ரயில் உள்ளிட்ட 12 ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்!
நீடாமங்கலத்தில் ஜோத்பூா் விரைவு ரயில் நிறுத்தம் ஏற்படுத்தக் கோரிக்கை

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

சென்னை - திருப்பதி விரைவு ரயில்கள் ஜூனில் 2 நாள்கள் முழுமையாக ரத்து
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking



