நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அப்பாடா.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை!

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை.

News image

பூண்டு வரத்து - Center-Center-Madurai

Updated On :21 பிப்ரவரி 2025, 6:36 pm IST

கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கம் விலை போல, கையில் எடுத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது.

ஒரு கிலோ பூண்டு எவ்வளவு என்று கேட்ட நிலை மாறி, 100 கிராம் பூண்டு விலை கேட்டு, அது கொடுத்த அதிர்ச்சியில், 50 கிராம் பூண்டு மட்டும் வாங்கிக் கொண்டு இதை இன்னும் எத்தனை வாரத்துக்கு வைத்து சமாளிக்கலாம் என்று சிந்திக்க வைத்திருந்தது இல்லத்தரசிகளை.

ஒரு மாதம் இரண்டு மாதம் என்றில்லாமல், ரூ.400 என்ற நிலையிலேயே பல நாள்கள் பூண்டு இருந்ததால், அவ்வளவுதான், இனி பூண்டு குழம்பெல்லாம் வைக்கவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவில் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

தற்போது வட மாநிலங்களிலிருந்து புதிதாக பூண்டு வரத்து அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், பிப்ரவரி 17 நிலவரப்படி, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.125க்கு விற்பனையானது. பிறகு அது தற்போது ரூ100- என்ற அளவுக்குக் குறைந்திருக்கிறது.

இது படிப்படியாக சில்லறை விற்பனைக் கடைகளிலும் எதிரொலிக்கலாம். அல்லது ஒரு சில வாரங்கள் கூட ஆகலாம் என்பதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.