மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செங்குன்றம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!

மின்மாற்றியில் சிக்கிய பந்தை மீட்க முயன்ற சிறுவன் பலி

News image

கோப்புப் படம்

Updated On :23 பிப்ரவரி 2025, 3:02 am

DIN

செங்குன்றத்தில் கைப்பந்து விளையாடிய சிறுவன், மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் கங்கை அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள மைதானத்தில் சிறுவர்கள் சேர்ந்து கைப்பந்து விளையாடியபோது, எதிர்பாராதவிதமாக பந்து மின்மாற்றியில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து, சிறுவர்கள் சேர்ந்து ஒருவர் மீது ஒருவர் ஏறி, மின்மாற்றியில் சிக்கிய பந்தினை மீட்க முயற்சித்துள்ளனர்.

இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பந்தை எடுக்க முயற்சித்த சிறுவர்கள் ஷியாம் (15) மற்றும் கணேஷ் (13) இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர். இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்த விபத்தில் சிகிச்சைக்காக இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், ஷியாம் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கணேஷ் தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.