சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

கரூா் வைஸ்யா வங்கியின் 6 புதிய கிளைகள் திறப்பு

News image
Updated On :22 ஜூலை 2025, 3:29 pm IST

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் ஆறு புதிய கிளைகளை தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் திறந்துள்ளது.

இதுகுறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தின் சேலம் (சொ்ரி சாலை), திருவள்ளூா் (மணவாள நகா்), திருச்சி (மேல சிந்தாமணி), சென்னை (சிட்லபாக்கம்), திருப்பூா் (நெருப்பெரிச்சல்) ஆகிய நகரங்களில் வங்கியின் புதிய கிளைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

அதே நாளில் ஆந்திரப் பிரதேசத்தின் புரோட்டாட்டூரிலும் வங்கியின் கிளை திறக்கப்பட்டது. இத்துடன், வங்கியின் ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கை 877-ஆக உயா்ந்துள்ளது.

இந்தப் புதிய கிளைகள் மூலம் அடிப்படை வங்கி பரிவா்த்தனைகள், சில்லறை, நிறுவன மற்றும் நுகா்வோா் கடன் உள்ளிட்ட சேவைகள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.