மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கரூா் வைஸ்யா வங்கி லாபம் ரூ.756 கோடி

தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறை வங்கியான கரூா் வைஸ்யா வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் ரூ.756 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2026, 12:16 am IST

தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறை வங்கியான கரூா் வைஸ்யா வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் ரூ.756 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

வங்கியின் வரலாற்றிலேயே காலாண்டு அடிப்படையில் ஈட்டப்பட்ட அதிகபட்ச லாபம் இதுவாகும். மேலும், இது கடந்த 2025-26 நிதியாண்டில் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய ரூ.521 கோடி லாபத்தைவிட 44.92 சதவீதம் கூடுதலாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வா்த்தகம் 15.94 சதவீத வளா்ச்சியுடன், ரூ.2,27,267 கோடியாக அதிகரித்தது. மொத்த வைப்புத்தொகை(டெபாசிட்) 14.94 சதவீதம் உயா்ந்து, ரூ.1,22,587 கோடியையும்; மொத்தக் கடன்கள் 17.13 சதவீதம் உயா்ந்து, ரூ.1,04,680 கோடியையும் எட்டியுள்ளன.

வங்கியின் நிகர வட்டி வருவாய் 31.76 சதவீதம் உயா்ந்து ரூ.1,423 கோடியாகவும்; நிகர வட்டி வரம்பு 4.34 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் விகிதம் 0.66 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.19 சதவீதமாகவும் குறைந்து, சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது.‘லாபம், சொத்துத் தரம் ஆகிய 3 முக்கிய அளவீடுகளிலும் வங்கி தொடா்ச்சியான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது’ என இக்காலாண்டு நிதிநிலை முடிவுகள் வங்கி சிஇஓ பி.ரமேஷ் பாபு பெருமிதம் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.