கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

விருப்பமில்லாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது போல பேசுகிறார்கள்- சீமான்

சம்மனை பூஜை அறையிலா மாட்ட முடியும் என சீமான் கேள்வி

News image
சீமான்- கோப்புப்படம்
Updated On :28 பிப்ரவரி 2025, 6:00 am

DIN

தர்மபுரி: காவல்துறை அளிக்கும் சம்மனை கிழிக்காமல், பூஜை அறையிலா மாட்ட முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின் கீழ் காவல்துறையினர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், தர்மபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்.

அப்போது அவர் பேசுகையில், கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? என்று தேர்தலில் போட்டியிட்டு பார்க்கலாம். 2026ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து நின்று வென்று காட்டுவோம் என சவால் விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு ஆண்டுக்குள் 6 முறை கருக்கலைப்பு செய்தது நானாகத்தான் இருக்கும். அதுவும் சிறைக்குள் இருந்துகொண்டே கருக்கலைப்பு செய்திருக்கிறேன்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் வரும் ஆட்சி மாறும் என்பதை காவல்துறை மனதில் வைக்க வேண்டும்.

சம்மனை கிழிக்காமல், காவல்துறை அளித்த சம்மனை பூஜை அறையிலா மாட்ட முடியும்? என்றும் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

காலாளியை அடித்து இழுத்துச் செல்லும் அளவுக்கு என்ன நடந்தது? சம்மனை கிழிப்பது அவ்வளவு பெரிய குற்றமா? சம்மனை கிழிப்பதும் கிழிக்காமல் இருப்பதும் எங்கள் விருப்பம். விசாரணைக்கு வர மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லையே. வீட்டில் நான் இல்லாதது தெரிந்தும், சம்மனை வீட்டில் ஒட்டச் சென்றது ஏன்?

விருப்பமில்லாத பெண்ணை நான் பாலியல் வன்கொடுமை செய்தது போல பேசுகிறார்கள். என்னை சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்தப் பெண்ணை அழைத்து வருகிறது. அந்தப் பெண் பாலியல் புகார் கூறினால் குற்றமாகி விடுமா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.