சென்னை: தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 500 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 88 முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் விண்ணப்பித்துள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி கூறியதாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், புதிதாக தொடங்கப்பட்ட 10 கல்லூரிகளில் தலா 100 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், அங்கு கூடுதலாக 50 இடங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 50 இடங்கள் வீதம் 500 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம். அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம். அதேபோன்று 88 முதுநிலை இடங்கள் அதிகரிப்பதற்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










