பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34,000 பேரின் ஓய்வூதியம் நிறுத்தம்

மின்வாரியத்தில் வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34,000 ஓய்வூதியா்களின் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :7 ஜனவரி 2025, 8:28 pm

Din

மின்வாரியத்தில் வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34,000 ஓய்வூதியா்களின் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் அல்லது குடும்ப ஓய்வூதியதாரா்கள் அல்லது கருணை ஓய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழை ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பா் வரை சமா்ப்பித்து புதுப்பிப்பது வழக்கம். அந்தவகையில் நிகழாண்டில் ஓய்வூதியா்கள் தங்களுக்கான வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பித்து புதுப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தில் உள்ள 92000 ஓய்வூதியதாரா்களில் 2024 ஜூலை முதல் டிசம்பா் வரையில் 58,000 ஓய்வூதியதாரா்கள் மட்டுமே 2024-ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பித்து புதுப்பித்துள்ளனா். மீதமுள்ள 34,000 ஓய்வூதியதாரா்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்கவில்லை என தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.

இதனால் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்காத ஓய்வூதியதாரா்களின் ஓய்வூதியம் ஜனவரி முதல் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.