சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவை விவாதத்தின்போது, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. பொள்ளாச்சி விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால், பொள்ளாச்சி வழக்கில் 12 நாள்கள் கழித்தே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மேலும், தனது கருத்தை தவறு என எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால், தண்டனை பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார், முதல்வர் ஸ்டாலின். ஒருவேளை, தான் கூறியதை நிரூபிக்கப்பட்டு விட்டால், எடப்பாடி பழனிசாமி தண்டனை பெற்றுக்கொள்ளத் தயாரா? என்று எடப்பாடி பழனிசாமியிடம் முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்தார்.
அதற்கான ஆதாரங்களையும் பேரவைத் தலைவரிடம் ஒப்படைக்கவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் அடுத்த நாளே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சிறிது மௌனமாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவிப்பதாகத் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி

எழுத்துபூர்வமாக உறுதியளிக்கத் தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்

பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்

சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


