மகளிர் இலவசப் பேருந்துக்கு எதிர்ப்பு; போராட்டம் அறிவிப்பு!என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! மதுரை காவல் அதிகாரி கைது!

திருக்கார்த்திகை விழாவுக்கு திருப்பரங்குன்றம் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை

News image
Updated On :11 ஜனவரி 2025, 5:17 pm IST

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிறப்பு காவல் ஆய்வாளர் ஜெயபாண்டி கைது செய்யப்பட்டார்.

மதுரையில் திருக்கார்த்திகை (டிச. 13) விழாவின்போது, திருப்பரங்குன்றத்துக்கு சென்ற 14 வயது சிறுமியுடன், திடீர் நகர் குற்றப்பிரிவில் சிறப்பு துணை ஆய்வாளராக இருந்த ஜெயபாண்டி பேச்சு கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, கழிப்பறை சென்ற சிறுமியைப் பின்தொடர்ந்த ஜெயபாண்டி, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஜெயபாண்டியின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனையடுத்து, ஜெயபாண்டி மீது குழந்தைகள் நலப் பிரிவில் சிறுமியின் பெற்றோர் பாலியல் புகார் அளித்தனர்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே, ஜெயபாண்டி மீதான புகார் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மீது போக்ஸோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், ஜெயபாண்டியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.