லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்: வி.சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

News image
செல்வப்பெருந்தகையுடன் வி.சி. சந்திரகுமார்.
Updated On :11 ஜனவரி 2025, 11:51 am

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதை காங்கிரஸ் நிர்வாகிகள் இணைந்து ஒரு மனதாக முடிவு செய்ததாக தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்து பெற்றார். தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்ற வி.சி. சந்திரகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த முதல்வருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த துணை முதல்வருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலை பொருத்தவரையில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறது.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தலில் இப்படி ஒரு வெற்றியை பெற்றதில்லை என்ற வரலாற்றை முறியடிக்கும் வகையில் வெற்றி பெறுவோம். சாதி, மத அடிப்படையில் யாருக்கும் எந்த இடத்திலும் இடம் கொடுக்கப் படுவதில்லை, ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டதுதான் திமுக கூட்டணி என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், திமுகவின் வெற்றி வேட்பாளர் சந்திரகுமார் இங்கு வந்திருக்கிறார். அவரை நாங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்குவோம். எங்களுடைய வெற்றி வேட்பாளரை காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறோம், விட்டுக்கொடுத்ததில் எங்களுக்கு பின்னடைவில்லை.

இதைவிட வருங்காலங்களில் திமுக எங்களுக்கு விட்டுக் கொடுக்கும். பிடுங்கி எடுப்பது வேறு கேட்டு பெறுவது என்பது வேறு. எந்தவித சங்கடமும் இல்லாமல் நாங்கள் இந்த தேர்தலுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.