கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

‘வேர்களைத் தேடி' திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

‘வேர்களைத் தேடி' திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

அயலகத் தமிழர் நாளில் கொண்டாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்.

Updated On :12 ஜனவரி 2025, 6:34 am

DIN

‘வேர்களைத் தேடி' திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அயலகத் தமிழர் நாளை முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஞாயிற்றுகிழமை நடந்த நிகழ்ச்சியில் அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவிற்கு நான் சென்றபோது அயலகத் தமிழர்கள் காட்டிய பாசத்தை மறக்க முடியாது.

எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வை அயலகத் தமிழர்கள் தருகின்றனர். அயலகத் தமிழர்களால் பாலைகள் சோலைகளாகின. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டில் குடியேறிய மக்களால்தான் பாலைகள் சோலைகளாகின. வேர்களைத் தேடி திட்டத்தின் மூலம் 157 இளைஞர்கள் தாயகம் திரும்பி இருக்கின்றனர்.

அதில் 38 இளைஞர்கள் பயணத்தின் இறுதிநாளான இன்று அரங்கத்தில் இருக்கின்றனர். வேர்களைத் தேடி திட்டம் எனது அரசியல் வாழ்க்கையின் மைல்கல்லாக உள்ளது. வேர்களைத் தேடி திட்டம் என் மனதுக்கு மிக நெருக்கமான திட்டம். நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை அயலகத்தில் வசிக்கிற தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

உங்களின் கோரிக்கைகளை தீர்த்து வைப்பது எனது கடமை. 100 ஆசிரியர்கள், தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து தமிழர் வாழும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்த பயிற்றுநர்கள் அந்த பகுதியில் இருக்கக்கூடிய தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து தமிழ் மொழி, கலைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு நேரடி பயிற்சி அளிப்பர். இதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும். ஆசிரியர்கள், கலைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

உலகை உலுக்கும் உக்ரைன் போராக இருந்தாலும் சரி. மனதை உருக்கும் இஸ்ரேல் போராக இருந்தாலும் சரி. தமிழர்களை தேடிச் சென்று ஆதரவுக் கரம் நீட்டி வருகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.