கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பொங்கல் பண்டிகை: மது விற்பனையில் முதலிடத்தை நழுவவிட்ட மதுரை!

ஜனவரி 13 முதல் 16 வரையிலான பொங்கல் விடுமுறை நாள்களில் ரூ. 725.56 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனை

News image
டாஸ்மாக்- கோப்புப் படம்
Updated On :18 ஜனவரி 2025, 4:41 am

DIN

பொங்கல் திருநாளையொட்டி, தமிழகம் முழுவதும் சராசரியாக ரூ. 150 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், எப்போதும்போல மது விற்பனை சூடு பிடித்தது. இதுகுறித்து மாநில வாணிபக் குழு (டாஸ்மாக்) தெரிவித்ததாவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள மது விற்பனை நிலையங்களில் ஜனவரி 13 முதல் 16 வரையிலான பொங்கல் விடுமுறை நாள்களில் ரூ. 725.56 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்கப்பட்டன.

கடந்தாண்டு பொங்கல் நாள்களில் ரூ. 678.65 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் ரூ. 46 கோடி அதிகமாக விற்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் சராசரியாக தினசரி விற்பனை சுமார் ரூ. 145 கோடியாகவும், 3 நாள்களில் மட்டும் தினசரி விற்பனையில் 67 சதவிகிதம் உயர்ந்து ரூ. 241.85 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டன.

போகிப் பண்டிகையான ஜனவரி 13 ஆம் தேதியில் ரூ. 185.65 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான ஜனவரி 14 ஆம் தேதியில் ரூ. 268.46 கோடிக்கும், ஜனவரி 15-ல் திருவள்ளுவர் தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, காணும் பொங்கல் பண்டிகையான வியாழக்கிழமையில் ரூ. 271 கோடிக்கும் மதுபானங்கள் விற்கப்பட்டன.

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான ஜனவரி 13 ஆம் தேதியில் இருந்து 4 லட்சம் அட்டைப்பெட்டிகள் பீர் வகைகளும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டுவகை மதுபானங்கள் 8.5 லட்சம் அட்டைப்பெட்டிகளும் விற்கப்பட்டுள்ளன.

ஆனால், மது விற்பனையில் எப்போதும் முதலிடத்தைப் பிடிக்கும் மதுரை, இந்தாண்டில் தவற விட்டுவிட்டது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 149.55 கோடி மட்டுமே விற்பனையாகியுள்ளன.

பொங்கல் பண்டிகை மது விற்பனையில் ரூ. 179 கோடி விற்பனையுடன் திருச்சி மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் ரூ. 151.50 கோடி விற்பனையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 142 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

எப்போதும்போல அனைத்து மாவட்டங்களிலும் மது விற்பனை அதிகரித்த நிலையில், இந்தாண்டில் மதுரை மாவட்டம் மது விற்பனையில் வளர்ச்சியை காட்டவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.