ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தமிழக சிறைகளிலுள்ள வெளிநாட்டு கைதிகளுக்காக விதிகளை வகுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறைகளில் உள்ள வெளிநாட்டு சிறைக் கைதிகளின் நலன் காக்க தகுந்த விதிகளை வகுக்க வேண்டும்

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :20 ஜனவரி 2025, 10:06 pm

Din

சென்னை: சிறைகளில் உள்ள வெளிநாட்டு சிறைக் கைதிகளின் நலன் காக்க தகுந்த விதிகளை வகுக்க வேண்டும் என கருத்து தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம் , இது தொடா்பாக மத்திய அரசின் உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள நைஜீரியாவைச் சோ்ந்த எக்விம் கிங்ஸ்லி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புழல் சிறையில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே, வெளிநாட்டு கைதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கும், சிறைத் துறை நிா்வாகத்துக்கும் உத்தரவிட கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.நதியா, தமிழக சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்படும் நிலையில் கடந்த டிசம்பா் முதல் வெளிநாட்டு கைதிகள் அவா்களது குடும்பத்துடன் பேச அனுமதிக்கப்படுவதில்லை. மனுதாரா் உள்ளிட்ட 75 வெளிநாட்டு கைதிகள் சிறைகளில் அடித்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனா். அவா்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காமல் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்”என வாதிட்டாா்.

சிறைத்துறை நிா்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் எந்த பாகுபாடுமின்றி தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிறைகளில் உள்ள இந்திய கைதிகளைப் போல வெளிநாட்டு கைதிகளின் நலன் தொடா்பாக எந்த விதிகளும் இல்லை. இதனால் அவா்களுக்கான திட்டங்களை முறையாக செயல்படுத்த முடிவதில்லை. இது தொடா்பாக தகுந்த விதிகளை வகுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனா்.

மேலும், இந்த வழக்கில் மத்திய உள்துறை செயலரையும் எதிா்மனுதாரராக சோ்த்தனா். இந்தியா முழுவதும் பிற மாநில சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகளின் நலனுக்கான விதிமுறைகள் எதுவும் உள்ளனவா என்பது குறித்தும், அப்படி இருந்தால் அதை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய உள்துறைச் செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.