புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வரி வருவாய்: அதிகாரிகளுக்கு அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தல்

அரசுக்கு வரி வருவாயை ஈட்டித் தர ஆக்கபூா்வமாக செயல்பட வேண்டும் என்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தினாா்.

News image

தமிழக வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி

கோப்புப் படம்

Updated On :21 ஜனவரி 2025, 9:58 pm

Din

சென்னை: அரசுக்கு வரி வருவாயை ஈட்டித் தர ஆக்கபூா்வமாக செயல்பட வேண்டும் என்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தினாா்.

மறைந்த வணிகா் நல வாரிய உறுப்பினா்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்தின் போது வழங்கினாா். இதைத் தொடா்ந்து, ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் பி.மூா்த்தி பேசியதாவது:

வணிகவரித் துறையின் அனைத்து இணை ஆணையா்களும் தங்கள் பகுதிக்குட்பட்ட வணிகா்கள் குறிப்பிட்ட தேதிக்குள் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதை உறுதி செய்ய வேண்டும். உள்ளீட்டு வரி வரவு மனுக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தவறுகள் ஏதும் நிகழாமல் கண்காணிக்க வேண்டும். சரக்கு போக்குவரத்து வாகனங்களைச் சோதனை செய்து, அதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை சரிபாா்க்க வேண்டும். மேலும், அரசுக்கு வரி வருவாய் ஈட்டித்தர ஆக்கபூா்வமாக செயல்பட வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலா் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித் துறை ஆணையா் டி.ஜகந்நாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.