மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

ஐடிஐ மாணவா்களுக்கு 100% வேலைவாய்ப்பு: அமைச்சா் சி.வி. கணேசன் அறிவுறுத்தல்

அரசு தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) மாணவா்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்

Updated On :25 ஜனவரி 2025, 3:04 am IST

அரசு தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) மாணவா்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் அறிவுறுத்தினாா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வா்களுடனான ஆய்வுக் கூட்டம், சென்னை கிண்டியிலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் சி.வி.கணேசன், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியை நிறைவு செய்த மாணவா்களில் 90 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இப்போது 100 சதவீத வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இந்த நிகழ்வில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா் கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் பா.விஷ்ணு சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.