அஸ்வின், அஜித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகர் அஜித்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகர் அஜித்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்து, தனது பல்வேறு சாதனைகளால் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளுள் ஒன்றான "பத்ம பூஷன்" விருது பெறத் தேர்வாகியுள்ள தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், கலை, விளையாட்டு, ட்ரோன் வடிவமைப்பு என பல்துறைகளில் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ள அஜித்குமாருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
இன்னும் பல சிகரங்களைத் தொட்டு, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் புகழ் சேர்க்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
சமூகப் பணி, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றிய 139 பேருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிகழாண்டில் 7 போ் பத்ம விபூஷண் விருதுக்கும், 19 போ் பத்ம பூஷண் விருதுக்கும், 113 போ் பத்மஸ்ரீ விருதுக்கும் தோ்வாகியுள்ளனா்.
தமிழகத்தில் நடிகா் அஜித் குமாா், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருதும், பாரதி ஆய்வாளா் சீனி விஸ்வநாதன் உள்பட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...