திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய சிலுவைபுரம் கிராம மக்கள்!

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த சிலுவைபுரம் கிராம மக்கள்.

News image

சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தில், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய கிராம மக்கள்.

Updated On :26 ஜனவரி 2025, 12:07 pm IST

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசு நாளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஒன்றியம் சிலுவைபுரம் கிராம மக்கள், பல்வேறு வருவாய் கோட்டத்தில் உள்ள பகுதிகளில் ரேஷன் பொருள்கள் வாங்க ஓரு இடத்திற்கும், வாக்களிக்க வேறு கிராமத்திற்கும், வேறு பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரை தேடிச் செல்லும் நிலை உள்ளதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சிலுவைபுரம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.