நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரக்கோணம்: ரயில் நிற்கும் முன் இறங்க முயன்ற மருத்துவ பணியாளர் பலி

அரக்கோணத்தில் ரயில் நிற்கும் முன் இறங்க முயன்ற மருத்துவமனை பணியாளர் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

News image

சாம் டேவிட் நேசகுமார் (46).

Updated On :27 ஜனவரி 2025, 6:27 am

DIN

அரக்கோணத்தில் ரயில் நிற்கும் முன் இறங்க முயன்ற மருத்துவமனை பணியாளர் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், விண்டர்பேட்டையைச் சேர்ந்தவர் சாம் டேவிட் நேசகுமார் (46). வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

இவர் திங்கள்கிழமை காலை பணிமுடித்து ஏலகிரி விரைவு ரயிலில் அரக்கோணம் திரும்பினார். ரயில்நிலையத்தில் ரயில் நிற்கும் முன்பே ஓடும் ரயிலில் இருந்து சாம் டேவிட் இறங்க முயற்சித்தார்.

அப்போது தவறி கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி பலியானார். சடலத்தை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.