விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் என்னென்ன 'கட்'?தாய்நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்தவர் அழகு முத்துக்கோன்: முதல்வர் விஜய்சிறுமி உள்பட 6 பேர் கொலை! போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெறிச்செயல்!நேற்று தங்கம் வாங்கியிருந்தால் வருத்தப்படுவீர்கள்! இன்றைய விலை நிலவரம் (ஜூலை 11) அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

தில்லி: பையில் எரிந்த நிலையில் பெண் உடல்; இருவர் கைது

தில்லியில் பை ஒன்றில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது

News image

இருவர கைது

Updated On :27 ஜனவரி 2025, 11:53 am IST

புது தில்லி: கிழக்கு தில்லியின் காஸிபுர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிவீசப்பட்டிருந்த பை ஒன்றில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், தில்லி - உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியில், சனிக்கிழமை நள்ளிரவில், இந்த பை, அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றிலிருந்து வீசப்பட்டுள்ளது.

அப்பெண் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, உடல் இங்கு வீசப்பட்டிருக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு, காவல்துறைக்கு இது தொடர்பாக புகார் வந்தது. விரைந்து சென்ற காவல்துறையிடலை உடலை ஆய்வு செய்தபோது, அது முற்றிலும் எரிந்திருந்தது. உடலை அடையாளம் காண முடியவில்லை.

இப்பகுதியில், அவ்வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்தபோது, கோன்ட்லி பகுதியிலிருந்து ஒரு கார் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த காரின் முகவரி கண்டறியப்பட்டு வருகிறது.

இதுவரை பெண்ணின் அடையாளம் தெரியவராததால், அப்பகுதியைச் சுற்றிலும், பெண் காணாமல் போனதாக வந்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில் தற்போது இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.