புது தில்லி: கிழக்கு தில்லியின் காஸிபுர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிவீசப்பட்டிருந்த பை ஒன்றில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், தில்லி - உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியில், சனிக்கிழமை நள்ளிரவில், இந்த பை, அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றிலிருந்து வீசப்பட்டுள்ளது.
அப்பெண் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, உடல் இங்கு வீசப்பட்டிருக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு, காவல்துறைக்கு இது தொடர்பாக புகார் வந்தது. விரைந்து சென்ற காவல்துறையிடலை உடலை ஆய்வு செய்தபோது, அது முற்றிலும் எரிந்திருந்தது. உடலை அடையாளம் காண முடியவில்லை.
இப்பகுதியில், அவ்வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்தபோது, கோன்ட்லி பகுதியிலிருந்து ஒரு கார் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த காரின் முகவரி கண்டறியப்பட்டு வருகிறது.
இதுவரை பெண்ணின் அடையாளம் தெரியவராததால், அப்பகுதியைச் சுற்றிலும், பெண் காணாமல் போனதாக வந்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில் தற்போது இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி ரௌடி கடலூா் அருகே வெட்டிக்கொலை
ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பாலியல் வன்கொடுமை வழக்கு! குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை: தில்லி நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


