ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

தில்லி: பையில் எரிந்த நிலையில் பெண் உடல்; இருவர் கைது

தில்லியில் பை ஒன்றில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது

இருவர கைது

Published On :27 ஜனவரி 2025, 11:57 am IST

புது தில்லி: கிழக்கு தில்லியின் காஸிபுர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிவீசப்பட்டிருந்த பை ஒன்றில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், தில்லி - உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியில், சனிக்கிழமை நள்ளிரவில், இந்த பை, அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றிலிருந்து வீசப்பட்டுள்ளது.

அப்பெண் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, உடல் இங்கு வீசப்பட்டிருக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு, காவல்துறைக்கு இது தொடர்பாக புகார் வந்தது. விரைந்து சென்ற காவல்துறையிடலை உடலை ஆய்வு செய்தபோது, அது முற்றிலும் எரிந்திருந்தது. உடலை அடையாளம் காண முடியவில்லை.

இப்பகுதியில், அவ்வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்தபோது, கோன்ட்லி பகுதியிலிருந்து ஒரு கார் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த காரின் முகவரி கண்டறியப்பட்டு வருகிறது.

இதுவரை பெண்ணின் அடையாளம் தெரியவராததால், அப்பகுதியைச் சுற்றிலும், பெண் காணாமல் போனதாக வந்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில் தற்போது இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.