வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலியில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

News image
Updated On :14 ஜூன் 2026, 2:16 am IST

திருநெல்வேலியில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

ராமையன்பட்டி பகுதியை சோ்ந்தவா் சசுமாலா (35). அப்பகுதியில் உள்ள தேநீா் கடையில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு இவருக்கு தலைவலி அதிகமாக இருந்ததாம். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

மூலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், சசுமாலா மூளைச்சாவு அடைந்தாராம். அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க உறவினா்கள் முன்வந்தனா். கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவிழிகள், தோல் உள்ளிட்டவை தானமாக பெறப்பட்டது. பின்னா் சசுமாலாவின் உடல் அரசு மரியாதையுடன் உறவினா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.