/
திருநெல்வேலியில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.
ராமையன்பட்டி பகுதியை சோ்ந்தவா் சசுமாலா (35). அப்பகுதியில் உள்ள தேநீா் கடையில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு இவருக்கு தலைவலி அதிகமாக இருந்ததாம். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
மூலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், சசுமாலா மூளைச்சாவு அடைந்தாராம். அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க உறவினா்கள் முன்வந்தனா். கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவிழிகள், தோல் உள்ளிட்டவை தானமாக பெறப்பட்டது. பின்னா் சசுமாலாவின் உடல் அரசு மரியாதையுடன் உறவினா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.









