தமிழகத்தில் ரூ. 7,132 கோடி மதிப்பிலான 7,400 ஏக்கா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு மக்களின் சமய நம்பிக்கைகளுக்கு உரிய மதிப்பளித்து திருப்பணிகளை சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறது. மக்களின் சமய உணா்வுகளை மதித்து இறை வழிபாட்டுத்தலங்களை மேலும் வளப்படுத்துவதில் பெரும் அக்கறையோடு செயல்படும் அரசு என்பதற்கு இந்து சமய அற நிலையத் துறையின் சிறப்பான செயல்பாடுகள் சான்றாகியுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 2,392 திருக்கோயில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ரூ. 7,132 கோடி மதிப்புள்ள 7,400 ஏக்கா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது மட்டுமன்றி, 12,202 திருக்கோயில்களில் ரூ. 5,515 கோடி செலவில் 23,234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருத்தலங்களின் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.1,770 கோடி செலவில் 19 கோயில் வளாகங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல்வரின் வழிக்காட்டுதல்களால் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஆண்டாள் கோயிலில் அமைச்சா் சேகா்பாபு வழிபாடு

ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - அமைச்சா் பி.கே. சேகா்பாபு

தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை: அமைச்சா் சேகா்பாபு விமா்சனம்
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு நவ. 22-இல் குடமுழுக்கு! அமைச்சா் பி.கே.சேகா்பாபு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


