சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி புறப்பட்ட விமானம், விமான நிலைய ஓடுபாதையில் பறக்கத் தயாரான போது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பிவைக்கப்பட்டனா்.
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு 65 பயணிகள், 5 விமானப் பணியாளா்கள் என மொத்தம் 70 பேருடன் ஞாயிற்றுக்கிழமை காலை 10.10 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டது. ஓடுபாதையில் விமானம் ஓடத் தொடங்கி, மேலே பறக்கத் தயாரானபோது, விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தாா்.
இதையடுத்து விமானத்தை உடனடியாக நிறுத்திய விமானி, இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தாா். பின்னா் விமானம் இழுவை வாகனம் மூலம் புறப்பாடு பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து விமானப் பொறியாளா்கள் விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய அதிக நேரம் ஆனதால், பயணிகள் அனைவரும் மாற்று விமானங்கள் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.
தொடர்புடையது
தொழில்நுட்ப கோளாறு துபை புறப்பட்ட விமானம் தரையிறக்கம்
என்ஜினில் கோளாறு: ஸ்விட்சா்லாந்து புறப்பட இருந்த விமானத்தின் பயணம் ரத்து! பயணிகள் மீட்பு; 4 போ் காயம்!

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானத்தால் பயணிகள் அவதி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


