ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி ! போலீஸார் விசாரணை

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 J-K's Rajouri
ஜம்மு - காஷ்மீர்
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் தனது சொந்த சர்வீஸ் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

54 ராஷ்டிரிய ரைபிள்ஸில் பணியமர்த்தப்பட்ட வீரர், சனிக்கிழமை இரவு ரஜோரி நகரத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் சோல்கி கிராமத்தில் உள்ள முகாமின் தலைமையகத்தில் பணியில் இருந்தபோது பலியானார்.

துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதும் சக வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அங்கு வீரர் ஒருவர் பலியாகியிருப்பதைக் கண்டனர்.

ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்செயலாக அவரது துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறியதா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் மேலும் கூறினர்.

எனினும், அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய போலீஸார் விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

ரஷ்மிகாவின் தி கேர்ள்பிரண்ட் படத்தின் முதல் பாடல் எப்போது?

Summary

An army personnel died of a bullet injury from his own service rifle inside a camp in Rajouri district of Jammu and Kashmir, officials said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com