டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ரஷ்மிகாவின் தி கேர்ள்பிரண்ட் படத்தின் முதல் பாடல் எப்போது?

ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள தி கேர்ள்பிரண்ட் படத்தின் அப்டேட்...

News image

தி கேர்ள்பிரண்ட் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / கீதா ஆர்ட்ஸ்.

Updated On :6 ஜூலை 2025, 12:15 pm IST

ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள தி கேர்ள்பிரண்ட் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகை ரஷ்மிகா மந்தனா அனிமல், புஷ்பா திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.

தெலுங்குப் படங்களைத் தாண்டி பாலிவுட் படங்களில் நடிக்க ரூ. 15 கோடி வரை சம்பளம் பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.

இந்த நிலையில், ரஷ்மிகா கதை நாயகியாக நடித்துவந்த, ‘தி கேர்ள்ஃபிரண்ட் (the girlfriend) படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது.

கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் தீக்‌ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நதிவே எனும் முதல்பாடல் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இப்படம் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வருகிறது. ரஷ்மிகா பிறந்தநாளை முன்னிட்டு பாடலின் டீசர் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது.

Summary

A new update has been released for the film The Girlfriend starring Rashmika Mandanna.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.