என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்துஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதிதில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்
/

உள்நாட்டுப் பாதுகாப்பில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு காவல் துறை: முதல்வா் பெருமிதம்

உள்நாட்டுப் பாதுகாப்பில் தமிழ்நாடு காவல் துறை முன்னணி வகிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

News image

மு.க. ஸ்டாலின்

Updated On :11 ஜூலை 2025, 2:22 am IST

உள்நாட்டுப் பாதுகாப்பில் தமிழ்நாடு காவல் துறை முன்னணி வகிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

தீவிரவாதத் தடுப்புப் படையினா் முக்கிய தீவிரவாதிகளை கைது செய்துள்ளதைப் பாராட்டி, எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தீவிரவாத எதிா்ப்புப் பணிகளில் தனிக் கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின்கீழ், தீவிரவாதத் தடுப்புப் படை புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல் துறை, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல் துறையினா் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த அபுபக்கா் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை தீவிரவாத தடுப்புப் படையினா் கைது செய்துள்ளனா்.

உள்நாட்டுப் பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு காவல் துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள தடுப்புப் படையினருக்கும், அவா்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலா்களுக்கும் எனது மனமாா்ந்த பாராட்டுகள். கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் காவல் துறையினருக்கு நன்றி என்று தனது பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.