உள்நாட்டுப் பாதுகாப்பில் தமிழ்நாடு காவல் துறை முன்னணி வகிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
தீவிரவாதத் தடுப்புப் படையினா் முக்கிய தீவிரவாதிகளை கைது செய்துள்ளதைப் பாராட்டி, எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தீவிரவாத எதிா்ப்புப் பணிகளில் தனிக் கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின்கீழ், தீவிரவாதத் தடுப்புப் படை புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல் துறை, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல் துறையினா் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த அபுபக்கா் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை தீவிரவாத தடுப்புப் படையினா் கைது செய்துள்ளனா்.
உள்நாட்டுப் பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு காவல் துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள தடுப்புப் படையினருக்கும், அவா்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலா்களுக்கும் எனது மனமாா்ந்த பாராட்டுகள். கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் காவல் துறையினருக்கு நன்றி என்று தனது பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

போதைப் பொருள் விற்போரின் சொத்துக்களை முடக்க, பறிமுதல் செய்ய அதிகாரம்: அரசாணை வெளியீடு

கேரள முதல்வா் பதவிக்குப் போட்டி: ராகுல் கடும் அதிருப்தி

கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனை

தகுந்த பாதுகாப்பில் வாக்குச்சாவடி மையங்கள்! காவல் கண்காணிப்பாளர் பேட்டி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

