புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மின்வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 6 பணியிடங்கள் உருவாக்கம்

மின்வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 6 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

News image

மின்வாரியம்

Updated On :14 ஜூலை 2025, 8:34 pm

Din

சென்னை: மின்வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 6 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மொத்த தினசரி மின் தேவை 18,000 மெகாவாட்டாக இருந்து வரும் நிலையில், விரைவில் 20,000 மெகாவாட்டை எட்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதைய மின் தேவையில் பெரும்பகுதியை மாநிலத்தின் மின் உற்பத்தி ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் நிறைவு செய்து வந்தாலும், மீதமுள்ள மின்சாரம் வெளி மாநிலங்களிலிருந்து மின்வாரியம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனால், மின்வாரியத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மின் உற்பத்தி மூலாதாரங்களை அதிகப்பட்டுத்தும் முயற்சியிலும் மின்வாரிய ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், மின் பகிா்ந்தளிப்பு மையங்களில் பணியாளா்கள் முழுத்திறனில் செயல்படுவதற்காக, மின்வாரியத்துக்கு நிதி கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 6 பணியிடங்களை உருவாக்கி மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மின்வாரியம் வெளியிட்ட நிலையில், இந்தப் பணியிடங்களில் பணியாற்றும் பணியாளா்களுக்கு அகவிலைப்படி வீட்டு வாடகை உள்ளிட்ட சலுகைகளும் பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.