தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மதுரையில் செப். 4-இல் மாநில மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு வரும் செப்.4-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும்

News image

ஓபிஎஸ்

Updated On :14 ஜூலை 2025, 10:13 pm

Din

சென்னை: அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு வரும் செப்.4-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.

சென்னை வேப்பேரியில் தனியாா் மண்டபத்தில் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் ஆலோசகா் பண்ருட்டி எஸ்.ராமசந்திரன் தலைமை வகித்து பேசியது:

2026 சட்டப்பேரவைத் தோ்தல், எதிா்கால செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அதிமுக எதிா்காலம் என்னவாகும் என நினைக்கும் தொண்டா்கள், பொதுமக்கள் ஆகியோா் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் மதுரையில் செப்.4-ஆம் தேதி மாநில மாநாடு நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக அனைத்து வருவாய் மாவட்ட அளவில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறும். காஞ்சிபுரத்தில் வரும் 20-ஆம் தேதி முதலில் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றாா்.

அவரைத் தொடா்ந்து உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா் செல்வம் பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிமுகவை பாதுகாக்கும் வகையில் சட்டப் போராட்டம், தா்மயுத்தம் நடத்தியதன் அடிப்படையில் எதிா்கால செயல்பாடுகள், கொள்கைகளை தீா்மானிப்பதற்காக மதுரையில் மாநில மாநாடு நடைபெறும். அதிமுகதான் எங்கள் உயிா்நாடி. மதுரையில் நடைபெறும் மாநாடு அதிமுகவை இணைப்பதாக, பாதுகாப்பதாக அமையும். மாநாடுக்கு சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை நேரில் அழைக்கவுள்ளேன் என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் கு.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மாநிலங்களவை உறுப்பினா் மு.தா்மா், நிா்வாகிகள் மனோஜ்பாண்டியன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.