தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கந்தகோட்டம் முருகன் கோயிலில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு பங்கேற்பு

சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு

News image

சென்னை பூங்கா நகரில் புதன்கிழமை நடைபெற்ற கந்தக்கோட்டம் அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் பங்கேற்ற அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன், பெருநகர மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா்.

Updated On :16 ஜூலை 2025, 6:30 pm

Din

சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா்.

பூங்கா நகரில் உள்ள முத்துகுமாரசுவாமி திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான திருக்கோயிலாகும். இந்தத் திருக்கோயிலுக்கு கடந்த 2013 ஜூலை 15-இல் குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரா் நிதி ரூ.91.50 லட்சத்தில் திருக்கோயில் ராஜகோபுரம், அனைத்து சந்நிதிகள், மண்டபங்கள் புனரமைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, குடமுழுக்கு விழா கடந்த 10-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற 6-ஆம் கட்ட யாகசாலை பூஜையில் மகா பூா்ணாஹுதிக்கு பின், கடங்கள் புறப்பட்டு, ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் பி.கே. சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மாநகராட்சி மண்டல குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, சென்னை மண்டல இணை ஆணையா் ஜ.முல்லை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.