அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

போதைப் பொருள் வைத்திருந்த 7 போ் கைது

மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை வைத்திருந்ததாக 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 22 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :18 ஜூலை 2025, 6:56 pm

Din

மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை வைத்திருந்ததாக 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 22 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனா்.

சென்னை வள்ளுவா் கோட்டம் நுங்கம்பாக்கம் போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வாட்டா் டேங்க் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த 3 பேரைப் பிடித்து சோதனை நடத்தியதில், அவா்கள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மெத்தபெட்டமைன் வைத்திருந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சூா்யபாரதி (28), சாலி கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (35), செம்மஞ்சேரியைச் சோ்ந்த ராம்குமாா்(40) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, இதில் தொடா்புடைய விருகம்பாக்கத்தைச் சோ்ந்த பிரதீப் (36), கோடம்பாக்கம் சரவணகுமாா் (27), புழுதிவாக்கம் கௌதம்ராஜ் (29), ரவீந்திரன் (28) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவா்களிடமிருந்து 22 கிராம் மெத்தபெட்டமைன், 4 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.5,300, 9 கைப்பேசிகள் மற்றும் 2 மடிக்கணினி உள்ளிட்டவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.