கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திருக்கோவிலூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது! 4 பேர் பலி!

திருக்கோவிலூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி.

News image

கார் கவிழ்ந்த விபத்து.

Updated On :20 ஜூலை 2025, 7:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருக்கோவிலூர்: திருவண்ணாமலை செல்லும் சாலையில் கார் நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை பலியாகினர். மேலும் காரில் பயணித்த 5 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்துக்குள்பட்ட டீ.தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (44, இவர் விழுப்புரம் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகின்றார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை காலை டீ.தேவனூரில் இருந்து திருவண்ணாமலை கோயிலுக்கு செல்வதற்காக காரில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை மாதவன் ஓட்டிச் சென்றுள்ளார்.

காரில் மாதவன் மனைவி மேனகா (35), அவரது மகள் கோஷிகா, சிவசங்கர் மனைவி சங்கீதா (30), பாலகிருஷ்ணன் மனைவி சுபா (55), ராதாகிருஷ்ணன் மனைவி தனலட்சுமி (70), முருகானந்தம் மகன் ராகவேந்திரன் (13) மேலும் இருவர் பயணித்தனர்.

கார் மணலூர்பேட்டை அடுத்த காட்டுக்கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, கார் நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழந்து விட்டதாம். காரில் பயணித்த சங்கீதா (30), சுபா (55), தனலட்சுமி (70), ராகவேந்திரன் (13) உள்ளிட்ட நான்குபேரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும், காரை ஓட்டிச் சென்ற ஆயுதப்படை பிரிவு போலீஸர் மாதவன், அவரது மனைவி மேனகா, மகள் கோஷிகா மற்றும் இருவர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கோ.பார்தீபன், திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் ஜெ.பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

உடனே காயமடைந்தவர்களை 108 அவசர ஊர்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலத்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மணலூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Summary

Four members of the same family were killed when a car skidded and fell into a roadside ditch after a tire burst near Thirukovilur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.