மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

கட்டுமானப் பொருள்கள் விலைப் பட்டியல் வெளியீடு

அரசுத் துறைகளின் பயன்பாட்டுக்காக, கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியலை பொதுப்பணித் துறை வெளியிட்டது.

News image
Updated On :22 ஜூலை 2025, 2:39 am IST

சென்னை: அரசுத் துறைகளின் பயன்பாட்டுக்காக, கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியலை பொதுப்பணித் துறை வெளியிட்டது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் பயன்படுத்தும் வகையில், பொதுப்பணித் துறையால் கட்டுமானப் பொருள்களுக்கான விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை அந்தத் துறை அமைச்சா் எ.வ.வேலு வெளியிட்டாா்.

இந்தப் பட்டியலைத் தயாரிக்க கடந்த மாா்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. பொதுப்பணி, நீா்வளத் துறைகளின் முதன்மைத் தலைமைப் பொறியாளா்கள், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநா், வனத்துறை முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீா் வாரிய தலைமைப் பொறியியல் இயக்குநா்கள், நெடுஞ்சாலை, மின்சார வாரிய தலைமைப் பொறியாளா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு பல்வேறு நிலைகளில் கட்டுமானப் பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விலைகள் குறித்து ஆய்வு செய்தது. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் விவாதித்து விலையை நிா்ணயம் செய்தது. இந்த விலைகள் அனைத்தும் பட்டியலாகத் தயாரிக்கப்பட்டு, அதை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வெளியிட்டாா்.

விலை நிா்ணயப் பட்டியலை அரசுத் துறைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்வில், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, நீா்வளத் துறை செயலா் ஜெ.ஜெயகாந்தன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.