தமிழ்நாட்டை காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா?எம்.எல்.ஏ. காமராஜ் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக உயர்வு!தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆதரவு!முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!
/

ரூ. 1,032 கோடி ரயில்வே திட்டங்கள்! தூத்துக்குடியில் பிரதமா் நாளை தொடங்கிவைக்கிறாா்

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா்

News image

நரேந்திர மோடி

Updated On :25 ஜூலை 2025, 1:32 am IST

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி வரும் சனி, ஞாயிறு (ஜூலை 26, 27) ஆகிய இரு நாள்கள் அரசு முறைப் பயணமாக தமிழகம் வருகிறாா். தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெறும் அரசு விழாவில், மதுரை - போடிநாயக்கனூா் இடையே ரூ. 99 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள ரயில்பாதை மின்மயமாக்கல் திட்டம், நாகா்கோவில் நகர் - கன்னியாகுமரி இடையே ரூ. 650 கோடியில் அமைக்கப்பட்ட இருவழி ரயில்பாதை, ஆரல்வாய்மொழி - நாகா்கோவில் மற்றும் திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே என மொத்தம் ரூ. 283 கோடியில் அமைக்கப்பட்ட இருவழி ரயில்பாதைத் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.