மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆக.9 முதல் வைகோ பிரசார பயணம்

மதிமுக பொதுச் செயலா் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக.9 முதல் ஆக.19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

News image
வைகோ- PTI
Updated On :25 ஜூலை 2025, 8:18 pm

Din

மதிமுக பொதுச் செயலா் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக.9 முதல் ஆக.19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் மதிமுக பொதுச்செயலா் வைகோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். அதன்படி, தூத்துக்குடியில் வருகிற ஆக.9-ஆம் தேதி பிரசாரப் பயணத்தை தொடங்கும் வைகோ அங்கு ‘ஸ்டொ்லைட் வெளியேற்றம்’ என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளாா்.

அதைத்தொடா்ந்து ஆக.10-இல் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ‘மதச்சாா்பின்மையும், கூட்டாட்சியும்’ என்ற தலைப்பிலும், ஆக.11-இல் தேனி மாவட்டம் கம்பத்தில் ‘முல்லை பெரியாறும், நியூட்ரினோவும்’ என்ற தலைப்பிலும், ஆக.12-இல் திண்டுக்கல்லில் ‘விவசாயிகள், மீனவா்கள் துயரம்’ என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளாா்.

ஆக.13-ஆம் தேதி தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில் ‘மேக்கேதாட்டுவும் மீத்தேனும்’ என்ற தலைப்பிலும், ஆக.14-இல்

கடலூா் மாவட்டம் நெய்வேலியில் ‘நெய்வேலி நிலக்கரி நிறுவனம்’ குறித்தும் பேசுகிறாா்.

பின்னா் 3 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு, ஆக.18-ஆம் தேதி திருப்பூரில் ‘ஹிந்தி ஏகாதிபத்தியம்’ என்ற தலைப்பில், ஆக.19 -இல் சென்னை திருவான்மியூரில் ‘சமூக நீதியும், திராவிட இயக்கமும்’ என்ற தலைப்பில் உரையாற்றி, தனது பிரசார பயணத்தை வைகோ நிறைவுசெய்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.