ஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

இளையராஜாவின் 20 நிமிட இசை குறித்து பிரதமர் மோடி பேசியதாவது...

Ilayaraja, Prime Minister Modi.

இளைராஜா, பிரதமர் மோடி. - படங்கள்: எக்ஸ் / இளைராஜா, பிரதமர் மோடி.

Published On :27 ஜூலை 2025, 4:35 pm IST

கங்கை கொண்ட சோழபுரத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய இளையாராவை பிரதம் மோடி மிகவும் பாராட்டி பேசியுள்ளார்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் நிறைவு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தொடக்கமாக, ஓம் சிவோஹம் என்ற பாடலை இளையராஜா இசையமைத்து முடிக்கும்போது பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செய்தார். அடுத்து, விழாவில் சோழீஸ்வரருக்கு திருவாசகம் சிம்பொனியையும் இளையராஜா இசைத்தார்.

20 நிமிடம் இசையமைத்த ராஜாவின் இசையைப் பிரதமர் மோடி மிகவும் ரசித்து பார்த்தார். பார்வையாளர்களும் ராஜாவின் இசையில் மெய் மறந்து ரசித்தனர்.

சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா

வணக்கம் சோழ மண்டலம். நமச்சிவாயா. நாதன் தாள் வாழ்க எனத் தனதுப் பேச்சை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும், அவர் பேசியதாவது:

இது ராஜராஜ சோழனின் இடம். இந்த இடத்திலேயே என்னுடைய நண்பரான இளையராஜாவின் இசை நம்மை சிவ பக்தியில் ஆழ்த்தியது.

நான் காசியின் எம்.பி. ஆனால், இங்கு இந்த ஓம் நமச்சிவாயா என்ற கோஷங்களைக் கேட்கும்போது என் உடலெல்லாம் புல்லரிக்கிறது.

ஆடி மாதத்திலே ராஜராஜ சோழனின் தரிசனத்துக்குப் பிறகு இளையராஜாவின் இசையும் மந்திரங்களைக் கேட்டு ஓர் ஆன்மிக அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் அடைந்தேன்.

பெருமை கொள்கிறேன்

140 கோடி மக்களின் நலனுக்காக இறைவன் சன்னதியில் வேண்டினேன். சோழர்கள் குறித்த கண்காட்சியை கண்டு பிரமித்துப் போனேன்.

இந்தச் சோழர்கள் தங்களது வியாபாரத்தை இலங்கை, மாலத்தீவு, தெற்காசியா வரை நீட்டிருந்தார்கள். நான் நேற்றுதான் மாலத்தீவில் இருந்து திரும்பி வந்தேன். இன்று, இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்றதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி தழிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்கப்படும் என்ற பெரும் அறிவிப்பை வெளியிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.

Summary

Prime Minister Narendra Modi on Sunday participated in the valedictory function at the 'Aadi Thiruvathirai' Festival on the occasion of the birth anniversary of King Rajendra Chola I at the Gangaikonda Cholapuram Temple in Tamil Nadu's Ariyalur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.