தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி

News image
தொல். திருமாவளவன்- DIN
Updated On :6 ஜூன் 2025, 10:19 am

DIN

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும், பின்னர் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல் ஹாசனும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன்,

"ஜூன் 14 ஆம் தேதி திருச்சியில் விசிக சார்பில் 'மதச்சார்பின்மை காப்போம்' பேரணி நடைபெற உள்ளது. மதச்சார்பின்மைக்கு மத்திய பாஜக அரசால் பெரும் தீங்கு சூழ்ந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதன் மூலம் குறிப்பாக மதச்சார்பின்மை கோட்பாட்டைப் பாதுகாப்பதன் மூலம்தான் ஒரு புதிய பாகுபாடற்ற இந்தியாவை உருவாக்கிட இயலும். ஆகவே அனைத்து ஜனநாயக சக்திகளும் தேசிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

திருச்சிராப்பள்ளியில் விசிக ஒருங்கிணைக்கும் இந்த பேரணியில் ஜனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சுற்றறிக்கை வெளியாகி உள்ளது. அது சாதிவாரி கணக்கெடுப்பு என்பதன் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அது முடிந்தபின்புதான் தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பாக குழுவை மத்திய அரசு அமைக்கும்.

அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கக் கூடாது என்கிற கோரிக்கையை கட்டாயமாக தமிழ்நாட்டில் இருந்து முன்வைக்கப்படும், அழுத்தம் கொடுக்கப்படும்.

முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரி அடிப்படையில் வெற்றிகரமாக நடைபெற வேண்டும்" என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.