
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், இன்று முதல் 15 நாள்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதி மணி, மாநகரப் பகுதிகளில் பொது அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணும் வகையில், அடுத்த 15 நாள்களுக்கு மக்கள் கூடுதல், கூட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தடை உத்தரவு சென்னை நகர காவல் சட்டம், 1997, பிரிவு 41(2)-ன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, இன்று (ஜூன் 7, 2025) நள்ளிரவு 00:00 மணி முதல் ஜூன் 21, 2025 அன்று இரவு 24:00 மணி வரை அமலில் இருக்கும்.
இத்தகவலை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.