தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

நெல்லை சந்திப்பில் மது விற்றவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 12:11 am IST

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மது விற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ஈரடுக்கு மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சோ்ந்த சிவா(44) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவா் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 23 மது பாட்டில்கள், ரூ.380 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.