மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமையாளர்கள் கைது

கர்நாடகத்தில் கல் குவாரியில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயன்ற குவாரி உரிமையாளர்கள் கைது

News image

பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2025, 2:57 am

கர்நாடகத்தில் கல் குவாரியில் மண், பாறைகள் சரிந்து விழுந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலியானார்.

கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் துமகேரே கிராமத்தில் கல் குவாரியில், வெள்ளிக்கிழமையில் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மண், பாறைகள் சரிந்து விழுந்தன. குண்டுவெடிப்பின்போது ஏற்பட்ட இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கி, பலத்த காயமடைந்தனர்.

இதனையடுத்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், மதுரையைச் சேர்ந்த மணி (40) என்ற தொழிலாளி, துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், தொழிலாளி இறந்ததை காவல்துறைக்கு தெரிவிக்காமல், மணியின் உடலை எரிக்கத் திட்டமிட்டு, தமிழ்நாட்டுக்கு கொண்டுவர குவாரி உரிமையாளர்கள் முயன்றனர்.

இருப்பினும், குவாரி உரிமையாளர்களின் சதித் திட்டத்தை அறிந்த காவல்துறையினர், மணியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, குவாரி உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.