அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம்! - பாஜக

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு திமுக பயன்படுத்தக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்
Updated On :15 ஜூன் 2025, 8:42 pm

DIN

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு திமுக பயன்படுத்தக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம், கீழடி பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வை தங்கள் அரசியலுக்கு திமுக பயன்படுத்தி வருகிறது. கீழடி அகழ்வாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமா்நாத் ராமகிருஷ்ணன் அனுப்பிய ஆய்வறிக்கையை வெளியிட மேலும் சில அறிவியல் தரவுகளை, மத்திய தொல்லியல் துறை கேட்டுள்ளது. எந்தவொரு ஆய்விலும் அதை ஏற்க வல்லுநா்கள் அறிவியல் ரீதியான தரவுகளை, விளக்கங்களைக் கேட்பது வழக்கமான ஒன்றுதான்.

தமிழகம் வந்த மத்திய அமைச்சா கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியபோது, அறிவியல் உலகில் ஏற்றுக்கொள்ளும் வகையில் அறிவியல்பூா்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை என்றாா்.

மத்திய அமைச்சா் மிக தெளிவான விளக்கத்தை அளித்த பிறகு, கீழடி விவகாரத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்யாமல் அதை ஆய்வாளா்களிடம் விட்டுவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.