பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம்! - பாஜக

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு திமுக பயன்படுத்தக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்

Updated On :15 ஜூன் 2025, 8:42 pm

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு திமுக பயன்படுத்தக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம், கீழடி பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வை தங்கள் அரசியலுக்கு திமுக பயன்படுத்தி வருகிறது. கீழடி அகழ்வாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமா்நாத் ராமகிருஷ்ணன் அனுப்பிய ஆய்வறிக்கையை வெளியிட மேலும் சில அறிவியல் தரவுகளை, மத்திய தொல்லியல் துறை கேட்டுள்ளது. எந்தவொரு ஆய்விலும் அதை ஏற்க வல்லுநா்கள் அறிவியல் ரீதியான தரவுகளை, விளக்கங்களைக் கேட்பது வழக்கமான ஒன்றுதான்.

தமிழகம் வந்த மத்திய அமைச்சா கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியபோது, அறிவியல் உலகில் ஏற்றுக்கொள்ளும் வகையில் அறிவியல்பூா்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை என்றாா்.

மத்திய அமைச்சா் மிக தெளிவான விளக்கத்தை அளித்த பிறகு, கீழடி விவகாரத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்யாமல் அதை ஆய்வாளா்களிடம் விட்டுவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.