தமிழில் விஷ்ணுபுரம் சரவணணுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் எழுதிய ஒற்றைச் சிறகு ஓவியா என்கிற சிறார் நாவலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான கவிதை, நாவல், நாடகம், கட்டுரை, சிறுகதைகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் விஷ்ணுபுரம் சவரணனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ஒற்றைச் சிறகு ஓவியா என்கிற சிறார் நாவலுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
தமிழில் தொடர்ந்து சிறார் கதைகள், நாவல்கள் எழுதிவரும் விஷ்ணுபுரம் சரவணன், கயிறு, நீலப்பூ, எலியின் வேட்டை உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இதேபோன்று, கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள் சிறுகதைத் தொகுப்புக்காக எழுத்தாளர் லட்சுமிஹருக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மொழியில் கங்கிசெட்டி சிவகுமாருக்கும், மலையாளத்தில் ஸ்ரீஜித் மூதேதாத்துக்கும் பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு: கோயில் நிர்வாகம் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதாபராமபுரம் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கம், வெள்ளி பொருள்கள் திருட்டு

வினா - விடை வங்கி... இந்திய தேசிய இயக்கம்! - 1

குக் வித் கோமாளி - 7: ஒளிபரப்பு தேதி, நேரம் அறிவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 22-3-2026
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


