மதுரை: நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா நாடு எங்கிருக்கிறது? அங்கு எப்படிச் செல்வது? என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியிருக்கிறது.
மதுரை ஆதீனத்துக்குள் நுழைவது தொடர்பான உத்தரவுக்கு எதிராக நித்யானந்தா சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா நாடு எங்கிருக்கிறது? அங்கு எப்படிச் செல்வது? பாஸ்போர்ட், விசா உள்ளதா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.
இதற்கு, நித்யானந்தா கைலாசாவில் உள்ளார். ஆஸ்திரேலியா அருகே கைலாசா உள்ளது. யுஎஸ்கே என்ற நித்யானந்தா இருக்கும் நாடு ஐ.நா. அவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று நித்யானந்தாவின் சீடர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மதுரை ஆதீன மடத்துக்குள் நுழையக் கூடாது என்று தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், புதிய வழக்குரைஞரை நியமிக்க கோரியதற்கு, மதுரை அமர்வு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத நடைமுறைகளைக் கேள்வி எழுப்புவது மதம், நாகரிகத்தை சிதைக்கும்: உச்சநீதிமன்றம்

ஆழ்வாா்திருநகரியில் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பொத்தான் எங்கு உள்ளது? வாக்களிப்பது எப்படி?

நிதி அமைச்சா் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டது ஏன்? பழனிவேல் தியாகராஜனுக்கு குஷ்பு கேள்வி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

