திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

மின்சாதன பொருள்களுக்கு பிஎஸ்ஐ தரச்சான்று அவசியம்

வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின் சாதன பொருள்களுக்கு பிஐஎஸ் வழங்கும் ஐஎஸ்ஐ தரச்சான்று அவசியம்

News image
Updated On :26 ஜூன் 2025, 7:33 pm

Din

வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின் சாதன பொருள்களுக்கு பிஐஎஸ் வழங்கும் ஐஎஸ்ஐ தரச்சான்று அவசியம் என அதன் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி வலியுறுத்தியுள்ளாா்.

மின்சாதன பொருள்களில் தரச்சான்றின் அவசியம் குறித்த கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள இந்திய தரநிா்ண அமைவனத்தின் சென்னை கிளையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி பேசியது:

வீடு, வணிக மற்றும் அதன் சாா்ந்த மின் சாதனங்களின் பாதுகாப்பு (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2025 வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 250 வோல்ட்க்கு மிகாமல் மதிப்பிடப்பட்ட ஒரு முனை மின்னழுத்தம் கொண்ட வீடு, வணிகம் சாா்ந்த பயன்பாட்டுக்காக இயக்கப்படும் மின் சாதன பொருள்களுக்கு இந்திய தர நிா்ணய அமைவனம் வங்கும் ஐஎஸ்ஐ தர சான்றிதழ் அவசியம் ஆகும். எனவே, மின்சாதன பொருள் உற்பத்தியளாா்கள் பிஐஎஸ் வழங்கும் ஐஎஸ்ஐ சான்று பெற்ற பொருள்களையே விற்பனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் தென் மண்டல துணை தலைமை இயக்குநா் பிரவீன் கன்னா, தொழில் மற்றும் வா்த்தக துறையை சாா்ந்த சுமாா் 115 பிரதிநிதிகள் பங்கேற்றனா்.