முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்ததால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.
கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு 153.35 அடியாக இருந்தது.
இதையடுத்து, கேரளத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள பெரியாறு, மஞ்சுமலா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 883 குடும்பங்களைச் சோ்ந்த 3,220 போ் 20 நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பகல் நேரத்தில் மட்டும் அணையை திறக்க வேண்டும் என தமிழகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இடுக்கி மாவட்ட ஆட்சியா் விக்னேஷ்வரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணை இருந்தாலும் அதனை பராமரிப்பதையும், திறப்பதையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
தொடர்புடையது

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்தது

அணை நீா்மட்டம் உயா்வு! தேக்கடி ஏரியில் மீண்டும் பெரிய படகு சேவைகள் தொடக்கம்!

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 200 க.அடி நீா்வரத்து

பெரியாறு அணை நீா்மட்டம் சரிவு: 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



