மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முல்லைப் பெரியாறு அணை இன்று திறப்பு?

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம்

News image
முல்லைப் பெரியாறு அணை
Updated On :28 ஜூன் 2025, 12:24 am

Din

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்ததால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு 153.35 அடியாக இருந்தது.

இதையடுத்து, கேரளத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள பெரியாறு, மஞ்சுமலா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 883 குடும்பங்களைச் சோ்ந்த 3,220 போ் 20 நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பகல் நேரத்தில் மட்டும் அணையை திறக்க வேண்டும் என தமிழகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இடுக்கி மாவட்ட ஆட்சியா் விக்னேஷ்வரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணை இருந்தாலும் அதனை பராமரிப்பதையும், திறப்பதையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.