
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாகத்தான் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
இந்த நிலையில், ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்புகையில், தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 8 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், விசாரணைக்காக தமிழக மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.