டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்த மீனவர்கள்!

இலங்கை சிறைபிடித்துள்ள மீனவர்களையும் படகுகளையும் மீட்கக் கோரி ஆளுநர் ஆர்.என். ரவியிடம் கோரிக்கை மனு அளித்த மீனவர்கள்.

News image
ஆளுநர் ஆர்.என். ரவியிடம் கோரிக்கை மனு அளித்த மீனவர்கள்.
Updated On :2 மார்ச் 2025, 6:01 am

DIN

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துவைத்துள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 42 மீனவர்களையும் அவர்களின் 8 விசைப்படகுகளையும் மீட்டுத்தருமாறு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மீனவர்கள் இன்று (மார்ச் 2) கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மீனவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியை மேற்கோள்வதாக உறுதியளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரத்தில் மீன்பிடிக்கச் சென்ற 42 மீனவர்களையும் அவர்களின் எட்டு விசைப்படகுகளையும், இலங்கை கடற்படைத்தனர் சிறை பிடித்தனர்.

மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்தொடர்ச்சியாக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தங்கச்சி மடத்தில் மூன்றாவது நாளாக மீனவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது, இலங்கை அரசு சிறைபிடித்துள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவ சங்கத்தினர் ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், மத்திய அரசிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.