மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தஞ்சை: ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற மாணவன் பலி!

காளையை அடக்க முயன்ற மாணவன் பலியானது பற்றி...

News image
தீரன் பெனெடிக்ட்
Updated On :5 மார்ச் 2025, 6:38 am

DIN

தஞ்சாவூர் அருகே ஜல்லிக்கட்டு காளையை அடக்கினால் ரூ. 200 தருகிறேன் என உரிமையாளர் கூறியதை நம்பி, காளையை அடக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவன் பலியானார்.

தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசையாஸ். இவரது மகன் தீரன் பெனெடிக்ட், வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்து வீட்டுச் சென்றுகொண்டிருந்த தீரன், ஒரு பண்ணை அருகே நின்றுகொண்டிருந்த காளையை பிடிக்க முயற்சித்துள்ளார். அப்போது தீரனின் மார்பில் காளை குத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த தீரன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

அருகிலிருந்தவர்கள் தீரனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தீரனின் உறவினர்கள் கூறுகையில்,

”அந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் மாட்டுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில், மாணவர்களிடம் மாட்டை அடக்கினால், 200 ரூபாய் தருகிறேன் என கூறியுள்ளார். பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவர்கள் காளையை அடக்கியபோது இந்த விபத்து நடந்தது” எனத் தெரிவித்தனர்.

மேலும், மாணவனின் உயிரிழப்புக்கு காரணமான ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.